Breaking News

அரசு மற்றும் உதவி பெறும் இல்லங்களின் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி - பிப்.27, 28-ல் சென்னையில் நடக்கிறது

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் முன்முயற்சியாக, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 36 அரசு மற்றும் 147 அரசு நிதி உதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவன இல்லங்களில் உள்ள குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த, சமூகநலத் துறை சார்பில் ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் 38 மாவட்டங்களும் சென்னை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தட்டப்பாறை (தூத்துக்குடி) என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் கடந்த டிசம்பரில் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ewSIk3a
via

No comments