Breaking News

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை - முழு விவரம்

சென்னை: கோவை உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு, மங்களூருவில் நடந்த ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 2022 அக்.23-ம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், காரை ஓட்டிவந்த கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (25) உயிரிழந்தார். இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கிருந்து 75 கிலோவெடிபொருள், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான ரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/M3k9qJY
via

No comments