Breaking News

பூத்துக் குலுங்கும் மாமரங்கள் - பெரியகுளத்தில் இந்த ஆண்டு மா விளைச்சல் 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு

பெரியகுளம்: பெரியகுளம் பகுதி மாமரங்களில் பூக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மா விளைச்சல் இந்த ஆண்டு 50 சதவீதம் அளவிற்கு உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரியகுளம், போடி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பயிர் வளர்ச்சிக்கு ஏற்ற பருவநிலை உள்ளதால் மா விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சோத்துப்பாறை, கோவில்காடு, சின்னாம்பாளையம், முருகமலை, சுக்காம்பாறை, கழுதைகட்டி ஆலமரம், குழாய்த்தொட்டி, உப்புக்காடு, கும்பக்கரை, மஞ்சளாறு, அல்லிநகரம், போடி-சிறைக்காடு, முந்தல் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மாமரங்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. கன்றுகள் நட்டு 4 ஆண்டுகளில் இருந்து பலன் தரும் 75 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் கொண்ட இம்மரம் ஆண்டுக்கு ஒருமுறை விளைச்சல் தரும் குறிப்பாக கோடை காலங்களில் இதன் விளைச்சல் மிக அதிகமாக இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/poIzFVa
via

No comments