Breaking News

புதுச்சேரி | மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விடிய, விடிய போராட்டம் - வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்

புதுச்சேரி: மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடிய, விடிய போராட்டம் நடந்து இரண்டாம் நாளாக இன்றும் தொடர்ந்ததால் அதில் ஈடுபட்டோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டபோது தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுவை கிழக்கு கடற்கரை சாலை காமராஜர் மணிமண்டபம் எதிரே சாமிபிள்ளை தோட்டத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் புதிய மதுபானக்கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடியிருப்பு, கோவில், முக்கிய சந்திப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்பகுதி அரசியல் கட்சியினர், அமைப்புகள், இயக்கங்கள் ஒன்று சேர்ந்து மதுக்கடை எதிர்ப்பு போராட்டக்குழுவை ஏற்படுத்தி பலகட்ட போராட்டம் நடத்தினர். இதனால் மதுக்கடை திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kYN50H
via

No comments