Breaking News

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே சாதி’ என அறிவித்தால் இடஒதுக்கீடு தேவையில்லை - கி.வீரமணி

சேலம்: ‘இந்தியாவில் இன்னும் சாதி ஒழிக்கப்படவில்லை. ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது போல, ஒரே சாதி என்று அறிவித்து, சாதியை ஒழித்துவிட்டால் இட ஒதுக்கீடு தேவையில்லை,’ என திக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசினார். "சேலத்தில் கடந்த 1938-ம் ஆண்டு பெரியார், சேலம் செவ்வாய்பேட்டையில் சுயமரியாதை பிரச்சார சங்கம் தொடங்கினார். சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த கட்டிடம் , பிற்காலத்தில் மனுர்குல தேவாங்க சங்கத்தினர் கைவசம் இணைத்துக் கொண்டனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு, எங்களுக்கு வந்த சாதகமான தீர்ப்பால் சங்க கட்டிடத்தை சட்ட ரீதியாக மீட்டுள்ளோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AsSoLPT
via

No comments