Breaking News

ஓபிஎஸ் தாயார் உடல் பெரியகுளத்தில் தகனம் - ஆளுநர் தமிழிசை, முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல்

பெரியகுளம் / சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(95). வயது மூப்பால் உடல் நலிவடைந்திருந்த நிலையில்,பெரியகுளத்தில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

தகவலறிந்த ஓ.பன்னீர்செல்வம் அன்றிரவே சென்னையில் இருந்து காரில் பெரியகுளம் விரைந்தார். தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது கால்களை பற்றிக் கொண்டு கதறி அழுத பன்னீர்செல்வத்தை உறவினர்கள் தேற்றினர். ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர்கள் ராஜா, சண்முகசுந்தரம், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ப.ரவீந்திரநாத் எம்.பி., ஜெய்பிரதீப் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/neVxawF
via

No comments