Breaking News

மதுரை | கருவறை முதல் கல்லறை வரை பெண்களை பாதுகாக்க சட்டம் உள்ளது - மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பேச்சு

மதுரை: கருவறை முதல் கல்லறை வரை பெண்களை பாதுகாக்க சட்டம் உள்ளது. பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் உள்ளதை பெண்கள் தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என கருத்தரங்கில் மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வி.தீபா பேசினார்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இன்று ஏக்தா பெண்ளுக்கான ஆதார மையம் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான நூறு கோடி மக்களின் எழுச்சி பிரச்சார கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு, காமராசர் பல்கலைக்கழக தொடர்பியல்துறை தலைவர் எஸ்.நாகரத்தினம் தலைமை வகித்தார். ஏக்தா பெண்களுக்கான ஆதார மைய ஆலோசகர் பி.பவளம் முன்னிலை வகித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ciTzbxl
via

No comments