Breaking News

கிருஷ்ணகிரி - குப்பம் பேருந்துகள் மகாராஜாகடை வழியாக இயக்க கோரிக்கை: போக்குவரத்து கழகம் பதிலளிக்க உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரியிலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை மகாராஜாகடை வழியாக இயக்க கோரிய வழக்கில் தமிழக மற்றும் ஆந்திர அரசு போக்குவரத்து கழகங்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடையை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள குப்பம் வரை மகாராஜாகடை வழியாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களின் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0KJOv7z
via

No comments