Breaking News

திருவையாறு புறவழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

மதுரை: திருவையாறு புறவழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தஞ்சாவூர் திருவையாற்றைச் சேர்ந்த செந்தில்நாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், பெரும்புலியூர், திருவையாறு ஆகிய வழியாக 6.74 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.191.34 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iWFLlgm
via

No comments