Breaking News

சிவிங்கி புலிகளை போல ஆப்பிரிக்காவில் இருந்து குள்ளநரிகளையும் கொண்டுவர வேண்டும் - வேதனையை பகிர்ந்த விவசாயிகள்

சேலம்: ஆப்பிரிக்காவில் இருந்து, சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தது போல, விளை பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, மயில்களைக் கட்டுப்படுத்த, குள்ள நரிகளை கொண்டு வர வேண்டும் என்று வேடிக்கையாக தங்கள் வேதனையை விவசாயிகள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: மலைப்பகுதிகள், வனப்பகுதிகள் ஆகியவற்றை ஒட்டிய விளை நிலங்களில், காட்டுப்பன்றிகள் புகுந்து, விளைபயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XrCO5cz
via

No comments