Breaking News

புதுச்சேரி | 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச்சில் முழுபட்ஜெட் - மகளிருக்கு சிறப்பு திட்டங்கள்?

புதுச்சேரி: புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச்சில் முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி நாளை தாக்கல் செய்கிறார். இப்பட்ஜெட்டில் வழக்கம்போல் வரி விதிக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் மகளிருக்கு அதிகளவில் சிறப்பு திட்டங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுவை சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசு அறிவுறுத்தல்படி, இந்த நடைமுறையை மாற்றி இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு திட்டமிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eEg8xYl
via

No comments