2047-ல் இந்தியாவில் நீரிழிவு நோய் இல்லாமல் இருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்
சென்னை: 2047-ம் ஆண்டில் உலக அளவில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும்போது, சர்க்கரை நோய் இல்லாத நிலை இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
கர்ப்பகால சர்க்கரை நோய்க்கான அமைப்பு சார்பில், கர்ப்பகால சர்க்கரை நோய் குறித்த 17-வது தேசிய மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. மூத்த சர்க்கரை நோய் நிபுணர் வி.சேஷய்யா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், கர்ப்பகால சர்க்கரை நோய் குறித்த கண்டுபிடிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த கையேட்டை வெளியிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/15Skouy
via
Post Comment
No comments