Breaking News

தமிழை பாதுகாக்க இன்னொரு மொழிப்போருக்கு தயாராக வேண்டும் - மதுரையில் ராமதாஸ் பேச்சு

மதுரை: ‘தமிழைத் தேடி’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிப்., 21-ல் தொடங்கினார். திண்டுக்கல் வழியாக மதுரை வந்த அவரது 8ம் நாள் பயண நிறைவு நிகழ்ச்சி மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் நடந்தது.

இதில் அவர் பங்கேற்று பேசியதாவது: தமிழைத்தேடி மதுரை மாநகருக்கு வந்த எனக்கு ஆதரவளித்து வாழ்த்திய பாலபிரஜாபதி உள்ளிட்டோருக்கு நன்றி. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்தேன். இங்கு தமிழன்னை இல்லை. எங்கும் தமிழன்னையும், தமிழையும் காணவில்லை. தமிழைத் தேடி என, சொல்வே வெட்கமாக உள்ளது. இந்நகரத்தில், தமிழ் புலவர்கள் வீட்டிலும் இல்லை. தொன்மை வரலாறு கொண்ட மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bMQhn2O
via

No comments