Breaking News

தருமபுரி | யானைகளை இடமாற்ற வனத்துறை வீசிய வெடிகளால் கரும்புத் தோட்டம் எரிந்து சேதம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே யானையை வனத்துக்குள் இடம்பெயரச் செய்ய வனத்துறையினர் பயன்படுத்திய வெடியால் கரும்புத் தோட்டம் எரிந்து சேதமானதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி கிராம பகுதியில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி விளைநிலங்களில் நடமாடி வருகின்றன. அவற்றை வனத்துறையினர் வெடி வெடித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்கின்றனர். ஆனாலும், சில நாட்களில் மீண்டும் யானைகள் விளைநிலங்களில் நுழைந்து சேதம் ஏற்படுத்துகிறது. அந்த வரிசையில், புதன்கிழமை மாலை பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி பகுதியில் மாதையன், சிவராஜ் ஆகிய விவசாயிகளின் கரும்புத் தோட்டத்துக்குள் யானை ஒன்று நுழைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9hcl8po
via

No comments