Breaking News

தமிழகத்தில் முதல் முறையாக கள்ளழகர் கோயிலில் ‘நவீன கிச்சன்’ - பக்தர்களுக்கு சுகாதாரமான முறையில் பிரசாதம்

மதுரை: தமிழகத்தில் முதல் முறையாக இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களில் மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ‘நவீன மற்றும் மாதிரி சமையல்கூடம்’ அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க, முழுக்க இயந்திரங்கள் மூலம் சுகாதாரமான முறையில் பிரசாதங்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படவுள்ளன.

உலகப்புகழ் பெற்றது மதுரை சித்திரைத் திருவிழா. இதனொரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரசித்திபெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்றான கள்ளழகர் கோயிலில் சம்பா தோசை பிரசாதம் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரசாதங்கள் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்படுகின்றன. அதனையொட்டி பிரசாத தயாரிப்புக்கூடங்கள் நவீனப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி தமிழகத்தில் முதல்முறையாக கள்ளழகர் கோயில் பிரசாத கூடம் நவீன மற்றும் மாதிரி சமையல் கூடமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாதிரியாக வைத்து மற்ற கோயில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7Cwy1gb
via

No comments