Breaking News

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: பிரசாந்த் கிஷோருக்கு சீமான் பதில்

சென்னை: “நிதிஷ் குமாரை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவும், உங்களால் முடியவில்லை, நான் பாருங்கள்... சீமான் மீது வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளேன் என காட்டுவதற்காகவும் பிரசாந்த் கிஷோர் என்னைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி (DA) உயர்வு மீட்புக்குழு சார்பில் சென்னையில் புதன்கிழமை நடந்த கோட்டையை நோக்கி மாபெரும் பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சீமான் பேசிய வீடியோவை வெளியிட்டு, இவர்களைப் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தது குறித்து கேட்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RJ9rqDk
via

No comments