Breaking News

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தலாம்: முடிவை அறிவிக்க இடைக்கால தடை

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தலாம், ஆனால் வரும் மார்ச் 24-ம் தேதிவரை முடிவை அறிவிக்க கூடாதுஎன்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவித்து அவற்றைரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குதொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு, விசாரணையை ஏப்.11-ம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3VRxCYy
via

No comments