Breaking News

'புதின் - ஜி ஜின்பிங் சந்திப்பு; உக்ரைன் வந்த ஜப்பான் பிரதமர்' - அடுத்த கட்டத்துக்கு நகர்கிறதா போர்?

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் நேட்டோ படையில் இணைய முயற்சி மேற்கொண்டது. இதற்கு ரஷ்யா அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அந்த நாடு தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு புதின் உத்தரவிட்டார்.

உக்ரைன் பாக்முட் நகரம்

கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போரில் இரண்டு நாடுகளுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது. கடந்த மாதம் உக்ரைனுக்கு திடீரென பயணம் மேற்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலருக்கு ராணுவ உதவி செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் சீனா அதிபராக மூன்றாவது முறையாக பதவியேற்ற ஜி ஜின்பிங், ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக இருவரும் எழுதியிருக்கும் கட்டுரையில் அமெரிக்காவுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார்கள்.

ஜி ஜின்பிங்

இதையடுத்து இந்த போரில் சீனாவின் நிலைப்பாடு மாறுவதாக அச்சம் தெரிவித்து வருகிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். இதற்கிடையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடந்த 21-ம் தேதி திடீரென உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.

அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போர் நிலவரம் குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது ஜப்பான் மற்றும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஜெலன்ஸ்கியிடம், புமியோ கிஷிடா உறுதி அளித்தார்.

ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா

அந்த நேரத்தில் ஜப்பான் கடலில் மீது ஏழு மணி நேரத்திற்கும் மேலாக ரஷ்யாவின் குண்டுவீச்சு விமானங்கள் (Tupolev Tu-95MS) பறந்தன. இந்த விமானங்கள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. தனது அணு ஆயுத வலிமையை வெளிப்படுத்தும் வகையில் ரஷ்யா பறக்க செய்தது. இதுகுறித்து அந்த நாடு, "இது சர்வதேச சட்டத்திற்கு கடுமையான இணக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது" என தெரிவித்திருக்கிறது.

இது சர்வதேச அரசியலில் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குக்குள் உக்ரைன் மீதான தனது தாக்குதலை, ரஷ்யா மேலும் தீவிரப்படுத்திருக்கிறது. ஒரே இரவில் சில நகரங்களில் ஆளில்லா விமானங்களை ஏவப்பட்டது. இதில் அந்த நாட்டில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப் ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டது.

உக்ரைன் பாக்முட் நகரம்

இதில் ஒருவர் இறந்திருக்கிறார். மேலும் 25 பேர் காயமடைந்திருக்கிறார்கள். உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெற்கு நகரமான ஜபோரிஜியாவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று பட்டப்பகலில் ஏவுகணையால் தாக்கப்பட்டபோது வெடித்த பாதுகாப்பு கேமரா வீடியோவை ட்வீட் செய்துள்ளார்.

மேலும் அவர், "சாதாரண மக்களும் குழந்தைகளும் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. இது உக்ரைனிலோ அல்லது உலகில் வேறு எங்குமோ இன்னொரு நாள் நடக்கக்கூடாது. ரஷ்ய பயங்கரவாதத்தை விரைவாக தோற்கடிக்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் உலகிற்கு அதிக ஒற்றுமையும் உறுதியும் தேவை.

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

ஒவ்வொரு முறையும் மாஸ்கோவில் 'சமாதானம்' என்ற வார்த்தையை யாராவது கேட்க முயற்சிக்கும் போது, ​​குற்றவியல் தாக்குதல்களுக்கு மற்றொரு உத்தரவு வழங்கப்படுகிறது" என தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் பாக்முட் பகுதியில் தற்காப்புப் பணியில் ஈடுபட்டுள்ள உக்ரேனிய படைகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.

இதேபோல் அந்த நாட்டின் தலைநகருக்கு தெற்கில் இருக்கும் ஒரு கல்லூரியில் இரண்டு தங்குமிடங்கள் ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கிறார். வடக்கு உக்ரைனின் தலைநகரம் மற்றும் பகுதிகள் முழுவதும் சைரன்கள் ஒலித்தன.

இதற்கிடையில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் - ரஷ்யா அதிபர் புதின் சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீனா, இந்த உறவு இருதரப்பு நோக்கத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் உலகளாவிய நிலப்பரப்பு மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான முக்கியமான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது என்ற கருத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

சீனா அதிபர் ஜின்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

மேலும் ஜி ஜின்பிங், "இப்போது 100 ஆண்டுகளில் நடக்காத மாற்றங்கள் நடக்க உள்ளன. நாங்கள் ஒன்றாக இருக்கும்போது, ​​இந்த மாற்றங்களைச் செயல்படுத்துகிறோம்" என புதினிடம் தெரிவித்தார். அதற்கு புதின், "நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று கூறினார். பின்னர் ஜி ஜின்பிங், "அன்புள்ள நண்பரே, தயவுசெய்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்" என்றார் என தெரிவித்திருக்கிறது.

உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேறுமாறு சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க வெள்ளை மாளிகை வலியுறுத்தியது. ஆனால், அவர் நட்பு பாராட்டிவிட்டு வந்திருக்கிறார். இதனால் ஜி ஜின்பிங்யின் ரஷ்ய பயணத்தையும் விமர்சித்தது அமெரிக்கா. இதையடுத்து சர்வதேச அரசியல் நோக்கர்கள், உக்ரைன் போர் வரும் காலங்களில் மேலும் உக்கிரமடைய வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.



from India News https://ift.tt/J07IyrY

No comments