Breaking News

பழனிசாமி இல்லாவிட்டால் அதிமுகவை சிலர் எதிரிகளிடம் அடமானம் வைத்திருப்பார்கள் - ஆர்.பி உதயகுமார்

மதுரை: ‘‘கே.பழனிசாமி இல்லாவிட்டால் அதிமுகவை சிலர் எதிரிகளிடம் அடமானம் வைத்திருப்பார்கள்’’ என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை புறநகர் அதிமுக மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் உள்ள செல்லம்பட்டியில் புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா தலைமை வகித்தார். உறுப்பினர் அடையாள அட்டைகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, தவசி, மாநில பேரவை துணைச் செயலாளர் தனராஜன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EXIfwoM
via

No comments