பெரியகுளம் | அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் மோதல் - காவல் நிலையம் தாக்கப்பட்டதில் போலீஸ் ஜீப் உடைப்பு
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரவு 10.30மணிக்கு காவல் நிலையம் தாக்கப்பட்டதுடன் ஆய்வாளர் ஜீப் , ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நேற்று (14-04-23) காலை முதல் இரவு வரை அம்பேத்கர் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. இதில் பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் காலை முதல் இரவு வரை ஊர்வலம், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இரவில் கல்லுப்பட்டியில் இருந்து வந்த ஒரு பிரிவினருக்கும் பட்டாளம்மன் கோயில் தெருவில் இருந்த ஒரு பிரிவினருக்கும் சிறுமோதல் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Zkzu4AL
via
No comments