Breaking News

தஞ்சாவூர் | சட்டவிரோதமாக விற்கப்பட்ட மது அருந்திய 2 பேர் உயிரிழப்பு: மதுவில் சயனைடு கலந்து இருந்ததாக மாவட்ட ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை அருந்திய 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் கீழவாசல் படைவெட்டி அம்மன் கோயில் தெருவைசேர்ந்தவர் குப்புசாமி(68). மீன் வியாபாரி. இவர் நேற்று காலை 11 மணியளவில் மீன் மார்க்கெட் எதிரில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார். ஆனால், மதியம் 12 மணிக்குதான் மதுக்கடை திறக்கும் என்பதால், அதன் அருகில் செயல்படும் பாருக்குச் சென்று அங்கு சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை வாங்கி அருந்திவிட்டு, மீன் மார்க்கெட்டுக்கு வியாபாரம் செய்யச் சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் திடீரென வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5osFuHm
via

No comments