Breaking News

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு சங்கங்கள், கூட்டமைப்புகள் நன்றி

சென்னை: தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு சங்கங்கள், கூட்டமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள அரசு, அவர்களது நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து, கடந்த அரசு விட்டுச்சென்ற கடும் நிதிநெருக்கடி மற்றும் கடன் சுமை, கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு இடையிலும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sfi4DNK
via

No comments