Breaking News

அனைத்து உழவர் சந்தைகளிலும் காய், கனி வரத்தை அதிகரிக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: அனைத்து உழவர் சந்தைகளிலும் காய், கனி வரத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் செயல்பாடுகள் குறித்து, மாவட்டவேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்), விற்பனைக்குழு செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். துறையின் செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத் துறை இயக்குநர் ச.நடராஜன் கூட்டத்தில் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iCQnGul
via

No comments