Breaking News

உசிலம்பட்டி | பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் கொய்யா மரங்களை அழிக்கும் விவசாயிகள்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கொய்யாவில் பூச்சி, புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் கொய்யா மரங்களை அழித்துவிட்டு மாற்று விவசாயம் செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே உள்ள வகுரணி கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு (61). இவர் நெல், காய்கறி, பூ, மரப்பயிர்கள் விவசாயம் செய்து வருகிறார். இவர் தற்போது கொய்யாவில் நல்ல விளைச்சல் இருந்தும் பூச்சி, புழு தாக்குதலால் நல்ல விலைக்கு விற்க முடியவில்லை. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய முடியாமல் வேறு வழியின்றி கொய்யா மரங்களை அழித்துவிட்டு மாற்று விவசாயம் செய்யவும், மரப்பயிர்கள் நடவும் முடிவெடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YgAUfqK
via

No comments