Breaking News

அதிமுகவின் கொடி, பெயரை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக்கூடாது - டிஜிபி அலுவலகத்தில் டி.ஜெயக்குமார் மனு

சென்னை: அதிமுக கொடியைப் பயன்படுத்தியது தொடர்பாக சேலத்தில் பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்காமல், பழனிசாமி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுகவின் கொடி, பெயர், சின்னத்தை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்றும் சென்னையில் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எந்த வகையிலும் அதிமுகவுக்கு சம்பந்தம் இல்லாதநிலையில், அவர்கள் அதிமுக கொடியையோ, கட்சி பெயரையோ, சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது. இதுதொடர்பான நீதிமன்ற உத்தரவு உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mevdWEC
via

No comments