Breaking News

RR vs SRH | கடைசி பந்தை நோ-பாலாக வீசிய சந்தீப் சர்மா: ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 52-வது லீக் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி பந்தை நோ-பாலாக வீசி இருந்தார் ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா. அந்தப் பந்தை லாங்-ஆஃப் திசையில் பெரிய ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்திருந்தார் சமாத். இருந்தும் அது நோ-பால் என்பதால் தப்பித்த அவர் சிக்ஸர் விளாசி தன் அணியை வெற்றி பெற செய்தார்.

215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஹைதராபாத் அணி விரட்டியது. முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் அன்மோல்பிரீத் சிங்கும், அபிஷேக் சர்மாவும். பின்னர் ராகுல் திரிபாதி உடன் 65 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் அபிஷேக். 34 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அபிஷேக் ஆட்டமிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8Ht2g3c

No comments