உலக தடகளப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

புதுடெல்லி: உலக தடகளப் போட்டி ஹங்கேரி நாட்டிலுள்ள புடாபெஸ்ட் நகரில் ஆகஸ்ட் 19-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய தடகள அணி தேர்வு நேற்று நடைபெற்றது.
போட்டிக்கான அணியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமை வகிப்பார். 28 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. புடாபெஸ்ட் நகரில் 27-ம் தேதி வரை போட்டி நடைபெறவுள்ளது. காயம் காரணமாக குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் விலகியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IP49nf7
No comments