Breaking News

ஆசிய விளையாட்டு போட்டி | குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது இந்தியா: 41 வருடங்களுக்குப் பிறகு சாதனை

ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோவில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குதிரையேற்ற பந்தயத்தின் டிரஸ்ஏஜ் பிரிவில்ஹிருதய் சேடா, திவ்யகிருதி சிங், அனுஷ் அகர்வாலா, சுதிப்தி ஹஜேலா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 209.205 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றது. சீனா (204.882) வெள்ளிப் பதகக்கமும், ஹாங் காங் (204.852) வெண்கலப் பதக்கமும் பெற்றன.

ஆசிய விளையாட்டு குதிரை பந்தயத்தில் இந்திய அணி 41 வருடங்களுக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 1982-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 3 தங்கப் பதக்கம் வென்றிருந்தது. ரகுபிர் சிங், ஈவன்டிங் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். ஈவன்டிங் அணிகள் பிரிவிலும் இந்திய அணி தங்கம் வென்றிருந்தது. அதேவேளையில் டென்ட் பெக்கிங்கில் ரூபிந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sISMwrJ

No comments