Breaking News

உலகக் கோப்பை நினைவுகள் | உதயமானது ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம்

1987 -ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு வெளியே நடத்தப்பட்டது. முதன்முறையாக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இணைந்து போட்டியை நடத்தின. இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்துதான் உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய அணியின் சகாப்தம் தொடங்கியது. ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வி கண்டது. அதுவும் நடப்பு சாம்பியனான இந்திய அணிக்கு எதிராக 2-வது முறையாக மோதிய ஆட்டத்திலேயே தோற்றிருந்தது.

அரை இறுதி சுற்றுக்கு தொடரை நடத்திய இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றன. 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதீத நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணி 255 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 45.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மறுபுறம் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் கால்பதித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/So3zmk6

No comments