Breaking News

ஆட்டம் மழையால் பாதியில் நின்றாலும் பல பேட்டிங் ரெக்கார்டுகளைக் காலி செய்த இங்கிலாந்து!

பிரிஸ்டலில் நேற்று பகலிரவு போட்டியாக நடைபெற்ற இங்கிலாந்து - அயர்லாந்து 3-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு இன்னிங்ஸ் கூட முழுதும் நிறைவுறாமல் முடிந்து போனாலும் இங்கிலாந்து 31 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்களை விளாசி பல பேட்டிங் ரெக்கார்டுகளைக் காலி செய்தது. 31 ஓவர்களுக்குப் பிறகு மழை காரணமாக ஆட்டம் நடக்கவில்லை. இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்று வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 61 ரன்களை விளாச மற்றொரு தொடக்க வீரர் ஃபில் ஜாக்ஸ் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 22 பந்துகளில் 39 ரன்களை அடித்து நொறுக்கினார். ஜாக் கிராலி தன் பங்கிற்கு 42 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 51 ரன்களை விளாசினார். இவர்கள் அனைவருக்கும் மேலாக இங்கிலாந்து டெஸ்ட் ஓப்பனர் பென் டக்கெட் 78 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 107 ரன்களை நொறுக்கினார். இதில் சில பல ரெக்கார்டுகளை காலி செய்தது இங்கிலாந்து.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0LgOTVS

No comments