Breaking News

பெர்த் டெஸ்ட்: என்ன லெந்த்தில் வீசுவது என பாக். கண்டுபிடிப்பதற்குள் சதம் கடந்த டேவிட் வார்னர்!

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பெர்த்தில் இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 211 பந்துகளில் 16 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 164 ரன்களை விளாசினார். மிட்செல் ஜான்சன் இவரைப் பற்றி தப்பும் தவறுமாக உளறிக்கொட்டியதற்கு வார்னர் தன் மட்டையினால் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பிட்சில் கொஞ்சம் புற்கள், ஈரப்பதம் இருந்தது. அப்போது பாகிஸ்தான் பவுலர்களால் இந்தப் பிட்சில் என்ன லெந்த்தில் வீசுவது என்று கண்டுப்பிடிக்க முடியாமல் திணறினர். எல்லா லெந்த்களிலும் வீசி வீசி கை வலி கண்டு விட்டனர். வெயில் அடித்து பிட்சில் பந்துகள் கொஞ்சம் எழும்பத் தொடங்கி அதிலும் சீரான முறையில் வீசுவதற்கான லெந்த்தை பாகிஸ்தான் பவுலர்கள் கண்டுப்பிடிக்கும் முன்னரே வார்னர் அதிரடி சதம் எடுத்துக் கடந்து சென்று விட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4DCNWfj

No comments