Breaking News

IND-W vs AUS-W 2-வது ஒருநாள் போட்டி | 3 ரன்களில் ஆஸி. வெற்றி!

மும்பை: இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 3 ரன்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்தப் போட்டி மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் 2-வது போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jdZ3GKb

No comments