Breaking News

ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 90 சதவீத பயணிகள் ரயில்களை வரும் 10-க்குள் இயக்க திட்டம்

இந்திய ரயில்வேயில் இயக்கப் படும் 13,349 பயணிகள் ரயில்களில் தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர்.

குறிப்பாக, மும்பை, சென்னை உட்பட ஏழு முக்கிய நகரங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் மின்சாரரயில்களில் மட்டும் சுமார் 1 கோடியே 23 லட்சம் பேர் பயணிக்கின்றனர். கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ரயில்வே துறை முதல்முறையாக பயணிகள் ரயில்களின் சேவையை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறுத்தியது. இதனால், ரயில்வேக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QRVOqf
via

No comments