Breaking News

அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினரிடம் இருந்து ரூ.11 கோடி உட்பட இதுவரை ரூ.40 கோடி ரொக்கம் பறிமுதல்: வருமான வரித் துறை சோதனைகளால் கலக்கத்தில் வேட்பாளர்கள்

வருமானவரித் துறையினர் நடத்தி வரும் தொடர் சோதனைகளால் வேட்பாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடம் மட்டும் இதுவரை ரூ.40 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. அதிகபட்சமாக அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினர் வீடு உள்ளிட்ட இடங்களில் மட்டும் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ரூ.364 கோடி ரொக்கம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது..

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த சில தினங்களாக வருமானவரித் துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்மந்தியும் தனியார் பள்ளிக் கூட்டமைப்பு களின் மாநில செயலாளருமான இளங்கோ வனுக்கு சொந்தமான பள்ளிக் கட்டிடம் உட்பட பல இடங்களில் கடந்த 2 நாட்களாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rxcH6k
via

No comments