Breaking News

தமிழக காவல் துறையில் இருந்து முதல்முறையாக தேசிய ஆணழகன் போட்டிக்கு தேர்வான தலைமைக் காவலர்

சென்னை அடையாறு போக்குவரத்து காவல் துறையில் தலைமைகாவலராக பணிபுரிபவர் புருஷோத்தமன். இவர் கடந்த 2002-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். அதற்கு முன்பே, தனது 18 வயது முதல் பல்வேறு ஆணழகன் போட்டிகளில் பங்குபெற்று ‘மிஸ்டர் சென்னை’, ‘மிஸ்டர் தமிழ்நாடு’ என பல பட்டங்களை பெற்றுள்ளார்.

ஏற்கெனவே 2000, 2001-ம் ஆண்டுகளில் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டம் வென்ற இவர், 2002-ல் காவல் பணியில் இணைந்த பிறகும்,போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றார். 2004 முதல் 2008 வரை தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் என மொத்தம் 7 ஆண்டுகள் ‘தமிழ்நாடு ஆணழகன்’ போட்டியில் கலந்துகொண்டு 7 முறை ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டம் பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rCtoNw
via

No comments