Breaking News

என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரி, தாராபுரத்தில் பிரதமர் இன்று பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரி மற்றும் தாராபுரத்துக்கு வருகிறார். அவரது வருகையையொட்டி போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை 10.10 மணிக்கு கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டுக்குச் செல்கிறார். அங்கு பிரச்சாரத்தை முடித்த பின்னர், ஹெலிகாப்டர் மூலம் தாராபுரத்துக்கு மதியம் 12.30 மணிக்கு வருகிறார். கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர் அருகே 68 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட் டுள்ளது. கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே 3 ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cyNnZt
via

No comments