Breaking News

சொந்த ஊர் சென்று வாக்களிப்பதற்காக சிறப்பு பேருந்துகள் உட்பட தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்: கடைசி நேரத்தில் கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டுகோள்

தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்சென்று வாக்களிப்பவர்களின் வசதிக்காக சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் சிறப்பு பேருந்துகள் உட்பட 14,215 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6-ம் தேதி நடக்க உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 5-ம் தேதி வரை, சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன், 3,090 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wl0yEZ
via

No comments