சிறுமிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தனது கல்லீரலை அளித்த தாய்- 20 மணி நேரம் சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்

திருச்சியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், ‘சிறுமியின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. கல்லீரல் செயல்பாடும் குறைவாக உள்ளதால் உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்' என்று பெற்றோரிடம் தெரிவித்தனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் கடந்த மார்ச் 10-ம் தேதி சிறுமியை பெற்றோர் அனுமதித்தனர். அங்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிறுமி நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uxMPZU
via
No comments