செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் எஸ்.பி. ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள தண்டரையில் உள்ள ஆசான் நினைவு பொறியியல் கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சுந்தரவதனம் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இந்த மையத்தின் பாதுகாப்பை சென்னை மாநகர போலீஸார் கவனித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g0Rwaz
via
No comments