20 ஆண்டுகளாக நடக்கும் நிலம் கையகப்படுத்தும் பணி: வேகமெடுக்காத மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம்

மதுரை-தூத்துக்குடிக்கு அருப்புக் கோட்டை வழியாக புதிய ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணிகூட முடிவடை யாமல் உள்ளது.
மதுரை-தூத்துக்குடி இடையே தற்போதுள்ள 159 கி.மீ. தூர ரயில் பாதை நெல்லை வழித்தடத்தில் வாஞ்சி மணியாச்சி வரை சென்று அங்கிருந்து மீளவிட்டான் வழியாக தூத்துக்குடியை சென்றடைகிறது. பேருந்து பயணத்தைவிட ரயில் பயணம் ஒரு மணி நேரம் கூடுதல் என்பதுடன் தூரமும் அதிகம். மேலும் இந்த வழித்தடத்தில் அதிக ரயில்கள் இயங்குவதால் கிராசிங்குகளும் அதிகம். எனவே அருப்புக்கோட்டை வழியாக மதுரை–தூத்துக்குடி இடையே புதிய அகல ரயில் பாதை திட்டம் கொண்டு வரப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3stHlOw
via
No comments