Breaking News

மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்: தூத்துக்குடி அருகே 2 பேர் கைது

மாலத்தீவுக்கு கடத்துவதற்காக, தூத்துக்குடி அருகே பண்ணைத் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான ஹசீஸ் என்ற போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டாம்புளி பகுதியில் உள்ள ஒரு பண்ணைத் தோட்டத்தில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ், வேலாயுதம் ஆகியோர் தலைமையிலான போலீஸார், நேற்று முன்தினம் இரவு அந்த பண்ணைத் தோட்டத்தில் சோதனை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2POKtHr
via

No comments