அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிவகங்கையில் ஜெராக்ஸ் கடையில் ரூ.500-க்கு பிறப்பு சான்று

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜெராக்ஸ் கடையில் ரூ.500-க்கு பிறப்பு சான்றை விற்பதாகப் புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீமாங் திட்டத்தில் 24 மணி நேரமும் பிரவசம் பார்க்கப்படுகிறது. இதனால் இங்கு சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், திருப்புவனம் ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக வருகின்றனர். ஆண்டுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் குழந்தைகள் வரை பிறக் கின்றன. தினமும் சராசரியாக 10 முதல் 15 குழந்தைகள் பிறக்கின்றன.இம்மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பொது சுகாதாரத்துறை மூலம் இணையதளத்தில் பதிவு செய்து பிறப்புச் சான்று வழங்கப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் தலா ஒரு சுகாதார ஆய்வாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளனர். ஆனால் அவர்கள் நேரடியாக பிறப்பு சான்றுகளை வழங்குவதில்லை. ஒரு சிட்டையை எழுதி கொடுத்து அருகேயுள்ள ஜெராக்ஸ் கடையில் பிறப்பு சான்றை வாங்கி கொள்ளுமாறு தெரிவிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3u1vPeC
via
No comments