கொல்கத்தாவை காப்பாற்றிய பந்துவீச்சாளர்கள்: 8 இன்னிங்ஸுக்கு பின் பொறுப்பாக ஆடிய மோர்கன்: பஞ்சாப் மகாமட்டமான ஆட்டம்
பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு, மோர்கனின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்தது. 124 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 பந்துகள்மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்து5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2R5tD7u
No comments