கரோனா கட்டுப்பாடுகளால் அச்சம்; சொந்த ஊர் திரும்ப ஆயத்தமாகும் வடமாநில தொழிலாளர்கள்: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி, மேம்பால பணிகள் மீண்டும் முடங்கும் அபாயம்

தமிழக அரசு கரோனா கட்டுப் பாடுகளை அறிவித்ததால் அடுத்து ஊரடங்கு அமலாகுமோ என்ற அச்சத்தில் சொந்த ஊர்களுக்கு மீண்டும் செல்ல வடமாநில தொழி லாளர்கள் தயாராகின்றனர். அவர் களைத் தடுத்து மதுரையில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி, மேம்பால பணிகள் தடையின்றி நடக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமிழக மாநகராட்சிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடக் கின்றன. மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க புதிய சாலைகள், பறக்கும் பாலம், உயர்மட்டப் பாலம், தரைப்பால கட்டுமானப்பணிகள் நடக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fW9FXc
via
No comments