முதியோர், மனநலம் பாதித்தவர்கள், ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ‘காவல் கரங்கள்’ திட்டம்: சென்னை காவல் துறை விரைவில் தொடக்கம்

சாலையோரம் சுற்றித் திரியும் முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், யாசகம் வாங்கும் சிறுவர், சிறுமிகள் என ஆதரவற்ற நிலைமையில் உள்ளவர்களை தேடிக் கண்டுபிடித்து மறுவாழ்வு அளிக்கும் ‘காவல் கரங்கள்’ திட்டத்தை சென்னை காவல் துறை விரைவில் தொடங்க உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. அப்போது, சென்னை காவல் துறையில் உள்ளூர் காவல் துறை, ஆயுதப்படை காவலர்கள் உட்பட 23,500 போலீஸார், 3 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், 700 ஓய்வுபெற்ற காவலர்கள், துணை ராணுவத்தினர் உட்பட மொத்தம் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். தேர்தல் பணி தவிர பிற பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ODAhAK
via
No comments