தமிழக அரசுப் பேருந்துகளில் பழுதடைந்த மின்னணு கருவிகளால் டிக்கெட்டுகள் தருவதில் தாமதம்

அரசுப் பேருந்துகளில் மின்னணு கருவி மூலம் டிக்கெட் வழங்குவது சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், நடத்துநர்கள் பழையபடி டிக்கெட்டை கையால் கிழித்து கொடுத்து வருகின்றனர்.
அரசுப் போக்குவரத்து கழகங்களில் பயணிகளுக்கு டிக்கெட் அளிக்கும் வகையில் பிரத்யேக கருவிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டன. இந்த கருவி மூலம் டிக்கெட் விவரங்கள், வசூல் தொகை, பணிமனைகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக தெரியவரும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tcZKA5
via
No comments