Breaking News

விடுமுறை தினம் என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்களும் வியாபாரிகளும் குவிந்ததால் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு, ஃபைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. மீன்களை வாங்க விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அதிகளவு கூட்டம் சேருவதை கட்டுப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Qj6OfP
via

No comments