Breaking News

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது

மதுராந்தகம் அருகேயுள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் பல நாடுகளில் இருந்து 26 வகையான பறவைகள் வருகின்றன. இவ்வாறுவரும் பறவைகள் இங்கு தங்கிமுட்டையிட்டு, குஞ்சு பொறிக்கின்றன. இனப்பெருக்க காலம் முடிந்து மே, ஜூன் மாதங்களில் இவை திரும்பிச் செல்லும்.

கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் ஏரி வற்றியதால், பறவைகள் வரத்து குறைந்தது. கரோனா பரவல் எதிரொலியாக ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பறவைகள் சரணாலயம், கடந்த ஜனவரி 10-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3v4xjoy
via

No comments