கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கவனக்குறைவாக இருக்கக் கூடாது: திருத்தணியில் ஆய்வு செய்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்

திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 வயதை கடந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும்பணியை நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்நேற்று பிற்பகலில் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். திருப்பதிக்குச் செல்லும் வழியில், திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 வயதை கடந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை ஆளுநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3arTiOn
via
No comments