Breaking News

கரோனா தொற்று பேரிடர் நேரத்தில் நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிப்பதாக புகார்

திருப்பூரில் கரோனா தொற்று பேரிடர் நேரத்தில் பொதுமக்களுக்கு தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, நியாயவிலைக் கடைகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர், வழங்கல் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரிடம் நல்லூர் நுகர்வோர் நல மன்றம் தலைவர் என்.சண்முகசுந்தரம் நேற்று அளித்த மனுவில், "திருப்பூர் வடக்கு பகுதியில் 168 நியாயவிலைக் கடைகளும், தெற்கு பகுதியில் 144 கடைகளும் செயல்படுகின்றன. தெற்கு பகுதியில் ஒரு கடைக்கு அரிசி அட்டைதாரர்கள் 1500-க்கு குறையாமல் உள்ளனர். இதில் ஒரு நபர் அட்டைதாரர்களுக்கு 8 கிலோ அரிசியும், 2 பேர் உள்ள அட்டைகளுக்கு 12 கிலோ அரிசியும், 3 அல்லது 4 பேர் உள்ள அட்டைகளுக்கு 20 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2P7Oo1E
via

No comments